த1ஸ்மாதோ3மித்1யுதா3ஹ்ருத்1ய யஞ்ஞதா3னத1ப1: க்1ரியா: |
ப்1ரவர்த1ன்தே1 விதா4னோக்1தா1: ஸத1த1ம் ப்3ரஹ்மவாதி3னாம் ||24||
தஸ்மாத்—--எனவே; ஓம்--—புனித எழுத்து ‘ஓம்’; இதி--—இவ்வாறு; உதாஹ்ருத்ய—--உச்சரித்து; யஞ்ஞ---—தியாகம்; தான—-தர்மம்; தபஹ----தவம்; க்ரியாஹா—--செய்யும்போதும்;ப்ரவர்தந்தே----தொடங்குகிறார்கள் விதான-உக்தாஹா--—வேதகட்டளைகளின்படி;ஸததம்—--எப்போதும்; ப்ரஹ்ம--வாதினாம்—--வேதங்களை விளக்குபவர்கள்.
BG 17.24: எனவே, யாகம் செய்யும் போதும், தானம் செய்யும்போதும், தவம் செய்யும்போதும், வேதங்களை விளக்குவோர் எப்போதும் வேத கட்டளைகளின்படி ஓம் என்று உச்சரிப்பதன் மூலம் தொடங்குகிறார்கள்.
ஓம் என்பது கடவுளின் ஆள்மாறான ஒருவரையும் குறிப்பாக எடுத்துக் காட்டாத அம்சத்தின் அடையாளப் பிரதிபலிப்பாகும். இது உருவமற்ற பிரம்மத்தின் பெயராகவும் கருதப்படுகிறது. இது படைப்பில் வியாபித்திருக்கும் ஆதி ஒலியாகும். அதன் சரியான உச்சரிப்பு: வாய் திறந்த நிலையில் 'ஆஆ', 'ஓஹ்' குவித்த உதடுகளுடன், மற்றும் 'ம்மம்' சுருக்கப்பட்ட உதடுகளுடன் உச்சரிக்கப்படுகிறது. இது பல வேத மந்திரங்களின் தொடக்கத்தில் சௌபாக்கியத்தைத் தூண்டும் ஒரு மூல மந்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
த1ஸ்மாதோ3மித்1யுதா3ஹ்ருத்1ய யஞ்ஞதா3னத1ப1: க்1ரியா: |
ப்1ரவர்த1ன்தே1 விதா4னோக்1தா1: ஸத1த1ம் ப்3ரஹ்மவாதி3னாம் ||24||
எனவே, யாகம் செய்யும் போதும், தானம் செய்யும்போதும், தவம் செய்யும்போதும், வேதங்களை விளக்குவோர் எப்போதும் வேத கட்டளைகளின்படி ஓம் என்று உச்சரிப்பதன் மூலம் தொடங்குகிறார்கள்.
Sign in to save your favorite verses.
Sign Inపవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!